முல்லைத்தீவு-அம்பகாமம் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம்!

0
175

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் மற்றும் காணி அளிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான
காதர் மஸ்தான், தெரிவு செய்யப்பட்ட சுமார் 19 பேருக்கு காணி அளிப்பு பத்திரமும், 113 பயனாளிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரதேச செயலாளர் ஜெயராணி, உதவி பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், சம்பந்தப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.