மத்திய மெக்சிகோவில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். பேருந்து, டிரக் வண்டி மற்றும் வேனும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். கடந்த பெப்ரவரி மாதமும் மெக்சிகோவில் நடந்த வாகன விபத்தில் 41 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.