தெற்கு மெக்சிக்கோவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்ற பஸ் ஒன்று நேற்று (06) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சென்றடையும் நோக்கியில் சட்டவிரோத முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் மெக்சிக்கோவின் ஊடாக பஸ்கள், பாரவூர்திகள் என்பவற்றில் பயணிக்கின்றனர். அவர்கள் பயணிக்கும் பாதை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.