தம்புள்ளை – வேமடில்ல குளத்தில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் 2 மாணவர்கள் உள்ளடங்கலாக நால்வர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குளத்தில் வீழ்ந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த 16 வயதுடைய மாணவர்கள் இருவரும் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், விபத்தில் படுகாயமடைந்த 18 மற்றும் 16 வயதுடைய ஏனைய இரு மாணவர்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.