யாழில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

0
196

யாழ்;ப்பாணத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். தென்மராட்சி – இடைக்குறிச்சி – வரணியைச் சேர்ந்த ஆ. அருள்குமார் என்ற 34 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழந்த நபர் தனது திருமணத்துக்காக பிரான்ஸிலிருந்து வந்திருந்தார். திருமணமாகி ஒரே மாதமான நிலையில் இன்னும் சில தினங்களில் அவர் பிரான்ஸூக்கு திரும்பவிருந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வீட்டிலிருந்து குறுகிய தூரமே சென்ற நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த அவர் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்கு இலக்கானார். உடனடியாக வரணி பிரதேச மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அங்கிருந்து யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணம் குறித்து யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.