யாழ்ப்பாண நகரில், பெருமளவான மாவா போதைப்பொருளுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ,இளைஞர்களை ,இலக்கு வைத்து, சந்தேக நபர், போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது, யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே, 33 வயதான சந்தேக நபர், மாவா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
,இதன் போது, 3 கிலோ 686 கிராம் மாவா போதைப் பொருள், சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.