26 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ். சிறையில் உள்ள 25 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, பாம்பன் மீனவர்கள் போராட்டம்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 25 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, இந்தியா தமிழ்நாடு இராமேஸ்வரன் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள், போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

படகுகளில் கறுப்பு கொடி ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மற்றும் தொண்டி அடுத்த நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தொழிலுக்கு சென்று, திங்கட்கிழமை அதிகாலை, இலங்கை கடற்படையால், நெடுந்தீவு கடற்பரப்பில், நான்கு நாட்டு படகுகளுடன் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மீனவர்களை விடுவிக்க கோரி, பாம்பன் நாட்டு படகு மீனவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள, சுமார்; 300-க்கும் மேற்பட்ட நாட்டுப படகுகள், கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை, பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, பின்னர், மாலை வேளை, மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்படும் என, மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles