ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி

0
60

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானுஓயாவில் இருந்து பதுளை வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில், விசேட பெட்டியுடன் கூடிய ரயிலும் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஏப்ரல் 5 ஆம் திகதி, எல்ல, ஒன்பது ஆர்ச் மற்றும் இந்த சுற்றுலாத்தலங்கள் வழியாக இரண்டு புதிய ரயில்கள் இயக்கப்படும். 

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு ரயில் மற்றும் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் ஒரு ரயில் இயக்கப்படும்.” என்றார்.