ரூ.12.16 மில். மதிப்புள்ள ’’குஷ்’’: இந்தியர்கள் மூவர் கைது!

0
7

12.16 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற வெளிநாட்டு பயணிகள் மூன்று விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால், வியாழக்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் இந்திய தொழிலதிபர்கள், அவர்களில் ஒருவர் 42 வயதுடைய ஆண், மற்ற இருவர் 43 மற்றும் 22 வயதுடைய பெண்கள்.

அவர்கள் கொண்டு வந்த பொதிகளில் 12 கிலோகிராம் 160 கிராம் “குஷ்” பாக்கெட்டுகளில் இருந்தது, அவை விமான நிலைய ஸ்கேனர்களால் சரிபார்க்கப்படுவதைத் தவிர்க்க கார்பன் கடதாசியால் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.