ரூ.15,000 மில். பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

0
68

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் (08) வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், 9,631 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 385 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,  4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கேரள கஞ்சா, ஹாஷிஸ் மற்றும் போதை மாத்திரைகள் போன்றவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 11 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  162 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.