மரதன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்கிராவை திரப்பனை வீதியில் லொறி ஒன்றும் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவை பகுதியிலிருந்து திரப்பனை நோக்கி பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் காயமடைந்து மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் ஆவார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.