லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; ஒருவர் பலி

0
75

மாத்தறை, திஹகொட, கல்பட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. கல் குவாரியொன்றிலிருந்து கற்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மலைப்பகுதியில் வைத்து பின்னோக்கி பயணித்த போது பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மாத்தறை, கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தக்க குணவர்த்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.