வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை திறப்பு

0
44

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான மக்கள் கூட்டமும், கொழும்பு கொட்டாஞ்சேனை மேற்கு  தொகுதியின் பிரதேச சபை திறப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை (22) ஜம்பட்டா வீதியில் சிறப்பாக நடைபெற்றது.

“வளமான நாடு அழகான வாழக்கை ” என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய்கெலி பல்தசார் பங்கேற்றிருந்தார்.

கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் வட கொழும்பு தொகுதி அமைப்பாளருமான சிவானந்த ராஜா மற்றும் கொழும்பு கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதி வேட்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.