கண்டி தென்னேகும்புர பகுதியில் அமைந்துள்ள மஹசோன் பலகாய அமைப்பின் ஸ்தாபகருக்கு சொந்தமான அலுவலகத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 100இ000 ரூபா பெறுமதியான புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
அமைப்பின் ஸ்தாபகரான அமித் வீரசிங்க. கண்டி மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் கண்டி பொலிஸார் இணைந்து தீயை அணைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பாதுகாக்க முடியவில்லை.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இந்தப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை அங்கு வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்