வவுனியாவில் சிங்கள குடியேற்றங்களுக்கு, திலீபனால், அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

0
83

வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமங்களுக்கு, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனால், பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், நந்திமித்திரகம கிரமத்தில் அமைந்துள்ள பன்சாலையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக, 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அத்துடன், அதற்கு அண்மையில் உள்ள கம்பிலிவௌ சிங்கள குடியேற்றப் பகுதிக்கும், பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனால், 19 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.