விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

0
4

நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 145 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 184 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 187 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும், போதை மாத்திரைகளுடன் 07 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 163 கிராம் 47 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 382 கிராம் 433 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 713 கிராம் 629 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 46012 கஞ்சா செடிகளும், 1896 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.