உடதும்பர – மடுகல்ல வீதியின் கலல்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
குழந்தை பயணித்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலில் உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மீமுரே பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். உடுதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.