விபுலானந்த சங்கீதம் இசை இறுவெட்டு வெளியீடு

0
313

விபுலானந்த சங்கீதம் இசை இறுவெட்டு வெளியிட்டு விழா, மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம் பெற்றது. சுவாமி விபுலானந்தரின் புகழ் போற்றும் பாடல்கள் அடங்கிய இசை இறுவெட்டு நிகழ்வு , அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இசைத்துறையினால் ஒருங்கிணைக்கப்பட்ட இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், முதற்பிரதிகள் அதிதிகளிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தா அழகிய கற்கை நிறுவக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ,மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகாராஜ், முன்னிலை அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஓய்வு நிலை பேராசிரியர் செல்வராஜா, முதன்மை விருந்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம்,
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரகலாமதி பத்மராஜா, கௌரவ அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், சுவாமி விபுலானந்தா
நூற்றாண்டு விழா சபை தலைவர் பாஸ்கரன் மற்றும் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனை மேற்கு , மண்முனை தென் எருவில் பற்று ஆகிய
பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மதிப்பீட்டாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இறுவெட்டின் இசையமைப்பாளர் ஸ்ரீமதி ஹம்சத்வணி பிரஷாந்த், பாடகர்கள், இசையமைப்பாளர்கள சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.