வெசாக் தினங்களில் பௌத்த கொடியின் வர்ணங்களில் தாமரை கோபுரம் ஒளிரும்

0
56

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என  தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் கோபுரம் ஒளிரும்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் மறக்க முடியாத வெசாக் பண்டிகையாக கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வெசாக் தினங்களில் பிக்சல் ப்ளூம் புத்தம் புதிய, ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை அனுபவிக்கும் நேரத்தையும் அறிவித்துள்ளது.