புத்தளம் – வென்னப்புவ கடலில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களில் இருவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலவை பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (13) வென்னப்புவ கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளின் போது, காணாமல்போன நான்கு இளைஞர்களில் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காணாமல்போன மூவரில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரது சடலங்களும் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.