வெவ்வேறு பகுதிகளில் இருந்து துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

0
15

நாட்டின் பல பகுதிகளில் இருந்து துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பத்புர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று சனிக்கிழமை (07) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளியவைச் சேர்ந்த 36 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, எத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரகனத்த பகுதியில் மற்றொரு சந்தேக நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் எத்திமலை வேவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர்  ஆவார்.

அத்துடன், நேற்று சனிக்கிழமை (07)  மாலை சிலாபம், பங்கதெனிய பகுதியில் போர்  12 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பங்கதெனியா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார்.