ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு !

0
85

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்க்ஷவும் பதில் பொதுச் செயலாளராகக்  கீர்த்தி உடவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக விஜயதாஸ ராஜபக்ஸவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் பணியாற்றுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தே இந்த உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் விதான பிறப்பித்துள்ளார்.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.