ஹிக்கடுவ கடற்கரையில் பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு

0
109
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டிற்கு விஜயம் செய்து ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 60 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நீராடச் சென்ற போது கடல் அலையில் சிக்கிய அவரை, கடற்கரையில் உள்ள உயிர்காக்கும் படையினர் கரைக்கு அழைத்துச் சென்று பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது, ​​அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.