119வது சிறைச்சாலைகள்தினத்தை முன்னிட்டு,மட்டு.சிறையில், இரத்த தானம்

0
81

119வது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில், இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.


மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறை கைதிகளின் நலன்புரி சங்கம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கி பிரிவு ஆகியன இணைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் நிலவும், இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தன.


சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் கீர்த்திகா மதனழகன் ,தாதிய உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறை கைதிகளின் நலன்புரி சங்கம் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.