142 புதிய வகை பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதி – ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை அடையாளம் காண, எமது நாட்டில் 8000க்கும் அதிகமான HS குறியீடுகள் உள்ளன.
இந்த அடையாளம் காணலின் ஊடாக , வரிவிதிப்பு மற்றும் வரிவிலக்கும் உள்ளிட்ட செயற்பாடுகள் சட்டரீதியாக மேற்கொள்ளப்படும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சுங்க குறியீடுகள் தொடர்பில் உலக வர்த்தக அமைப்பு அனைத்து நாடுகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அறிவிக்கும். எனினும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் இது ஒரு வருடம் தாமதமானது.
இந்த நிலையில், இதுவரையில் அடையாளம் காணப்பதற்கு சிரமம் நிலவிவந்த 142 பொருட்களுக்கு தற்போது HS குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.