27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

’20’ ஐ விரைவில் நிறைவேற்றுவோம் – பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கவனத்தில்கொண்டு கூடிய விரைவில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றிவிட வேண்டும். இந்தச் சட்ட வரைவை இழுத்தடிக்க நான் அனுமதி வழங்கமாட்டேன்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

‘‘2021ஆம் ஆண்டு நவம்பர் எனது இரண்டாவது பதவியாண்டு நிறைவு தினத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு மற்றும் புதிய அரசமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, அராஜகத்தை எதிர்க்கின்ற மற்றும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான புதிய அரசமைப்புக்கான தேவையைத் தெளிவுபடுத்தினார். குறிப்பாக தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தால் தனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அதனால் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தனது இரண்டாவது பதவியாண்டு நிறைவு திகதியான எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பைச் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related Articles

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

யாழில், நாளை மனித சங்கிலி ஆர்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலி ஆர்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு, தமிழ் மக்கள் தங்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

யாழில், நாளை மனித சங்கிலி ஆர்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலி ஆர்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு, தமிழ் மக்கள் தங்கள்...

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி இன்று கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் '22 கெரட்' தங்கத்தின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது.இது,...

நாடளாவிய ரீதியில் பூட்டப்படும் மதுபான சாலைகள்!

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளிலும் மது விற்பனையைத்...