2024 ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாகும்: PAFFREL

0
49

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இன்று இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹெட்டியாராச்சி, தேர்தல் சட்டத்தை மீறிய 108 சம்பவங்கள் இன்று வரை பதிவாகியுள்ளதோடு, தேர்தலின் போது அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் (IGP) நாட்டில் இல்லாத போதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் சிறந்த ஆதரவை வழங்கியதாகவும் அவர் கூறினார்.இதேவேளை, இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் 75% முதல் 80% வரையிலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பு குறிப்பிட்டுள்ளது.