30 கிலோ கிராம் திமிங்கில வாந்தியுடன் ஒருவர் கைது!

0
103

பேருவளை, கரடகொட பகுதியில் திமிங்கில வாந்தி எனப்படும் 30 கிலோ கிராம் ஆம்பருடன் மீனவர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பேருவளை கரையோரப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 

கைதானவர் 43 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட திமிங்கல அமரின் பெறுமதி சுமார் ஐம்பது கோடி ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.