30 வயதுடையவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்!

0
219

கண்டி, உடதும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீமுரே பிரதேசத்திலுள்ள வாவி ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என்று, உடதும்பர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திபிரிகஸ்கட்டுவ, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர்; மற்றுமொருவருடன் இணைந்து நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில், உடதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.