33 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிம்புட்டான, பட்டுகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
300 கிராம் ஐஸ்போதைப் பொருள், வெளிநாட்டு தராசு, தொலைபேசி, போதைப் பொருள் விற்பனையூடாக பெற்றுக்கொண்ட 102,500 ரூபாய் பணம், வெளிநாட்டு பணம், மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.