மலேசியாவில் இருந்து குஷ் போதைப்பொருளை நாட்டுக்கு கடத்திவர முற்பட்ட தாய்லாந்து இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் திங்கட்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்து இளைஞனிடமிருந்து 79 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.
குறித்த இளைஞன் போதைப்பொருட்களை தாய்லாந்தில் வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்துக்கு எடுத்துச்சென்று அங்கிருந்து மலேசிய விமான சேவையின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் பயணப்பொதிகளில் இருந்த சில இனிப்புப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ 910 கிராம் “குஷ்” போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட நபர் குறித்த போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
