நாட்டில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலை நீடித்து வரும் நிலையில், 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது.
இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.