28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

800: விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் சரத்குமார்!

”கலைத்துறையானது  அரசியல்  காரணங்களால் சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது ”என பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான  சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800‘ யில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இத் திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்து வருகின்றது.இந்தநிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2019ஆம் ஆண்டு  முடிவு செய்யப்பட்டு உருவாகி வரும் 800 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியான நிலையில் பலரும் இதனை சர்ச்சைக்குரிய விஷயமாக கருதி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

கலைத்துறை, அரசியல் தலையீட்டு காரணங்களால் சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது. கொரோனா சூழலில் அனைத்து தரப்பினரும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, பல சோதனைகளைக் கடந்து முன்னேற்றம் காண்பதற்காக புதுப்புது படைப்புகளை கொடுக்க தயாராகவுள்ள கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்படையதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ இதுபோன்ற நிகழ்வுகள் உதவபோவதில்லை.

காந்தி திரைப் படத்ததை   மக்கள் எப்படி விரும்பி ரசித்தார்களோ, அதே அளவிற்கு ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசிக்கத்தான் செய்வார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். எந்தவொரு படைப்பிலும் ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக் கூடாதே தவிர, தனிமனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கும் வகையிலான சாதனையாளரின் சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் தவறில்லை.

ஒரு சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்குப் பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும். அதை அரசியல் ரீதியாக மட்டும் அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது. முக்கியமாக கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது. எல்லைகளைக் கடந்து கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும். இந்த கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் நிச்சயமாக உருவாகிவிடும்.

அனைத்தையும் தாண்டி படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்பதால் தணிக்கை குழு மீது நம்பிக்கை வைத்து இப்பொதுதே படத்தை பற்றி கருத்துகள் தெரிவித்து படைப்பாளிகளின் முயற்சியை தடுக்கவேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles