வடிகால் அமைப்பின் கட்டணம் அதிகரிப்பு

0
180

வடிகால் அமைப்புக்குரிய கட்டண அதிகரிப்பு குறித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வடிகால் அமைப்புக்குரிய கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தது. அதற்கமைய, வீடுகளின் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகள் மற்றும் அரச பாடசாலைகளில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.