ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அவர், எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சமந்தா பவர், குறித்த விஜயத்தின் போது பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார்.