இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பதிவான மரணங்களில் சிலாபத்தில் 72 வயதான ஆண் ஒருவரும், மக்கொனையில் 86 வயதான பெண் ஒருவரும், கொழும்பு 15 இல் 76 வயதான ஆண் ஒருவரும், மஹரகமயில் 50 வயதான ஆண் ஒருவரும் வத்துபிட்டிவல பகுதியில் 86 வயதான ஆண் ஒருவரும் கொரோனா நோயால் மரணித்ததாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.