சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சுமார் 40 எம்.பிக்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையிலேயே இந்தத் தகவலை பாலித ரங்கே பண்டார வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வதற்கு பலர் தயாராக இருக்கின்றனர். ஆனால், எப்போது வருவார்கள் என கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.