36 நிலக்கரிக் கப்பல்களை இறக்குமதி செய்யத் திட்டம்

0
129

இதுவரை 13 நிலக்கரிக் கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.

12ஆவது கப்பலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாகவும், 13ஆவது கப்பலை தரையிறக்கும் பணிகள் நாளை (19) ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.36 நிலக்கரிக் கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்துக்கு தேவையான நிலக்கரி தம்மிடம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.