முன்மாதிரியான இளைஞர்கள் பசுமையான இலங்கை எனும் தொனிப்பொருளில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிந்தனைக்கு
அமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச ரீதியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஓந்தாட்சிமடம் கடற்கரை ஓரங்களில் குவிந்து கிடந்த பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும்
பணி பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் த.சபியதாஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸார், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், கழக உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.