பிரேஸிலில் வெள்ளம், மண்சரிவுகளினால் குறைந்தபட்சம் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாவோ பவ்லோ மாநிலத்தில் இச்சம்பவங்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சாவோ செபஸ்டியாவோ நகரில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். உபதுபா நகரில் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளாள்.
அதேவேளை. 228 பேர் வீடுகளை இழந்துள்ளனர் எனவம், 338 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சாவோ பவ்லோ மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.