வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்களை விடுவிக்கும் பணிகள் ஆரம்பம்!

0
262

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வரிச் சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கைக்கு ஏற்கனவே  கொண்டுவரப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கையை சுங்கத்துறை ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார  கூறியுள்ளார். 

இலங்கையிலிருந்து சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர்   அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.