நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தொடர்ந்து நீடிப்பதில்லை என உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்மானித்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்க்ஷ ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, இது தொடர்பான தனது வாதங்களை முன்வைத்தார்.
மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இதனை அறிவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பிரதிவாதிகள் இருவருக்கும் விதிக்கப்பட்ட பயணத்தடை இனி இல்லை என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.