தேயிலை தூளின் விலையில் வீழ்ச்சி

0
199

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் தேயிலை தூள் ஒரு கிலோகிராமின் விலை 200 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் ஒரு கிலோகிராம் இதுவரை 1250 ரூபாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

எனினும் தற்பொழுது 1050 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுவதாக பெருந்தோட்ட துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தால் எதிர்காலத்தில் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாரிய சவாலை சந்திக்க நேரிடும் என அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.