உர விநியோகம் இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

0
174

எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உர விநியோகம் தனியார் நிறுவனங்களிடம்  ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உரம், சேதன உரம், விதைகள் மற்றும் விவசாய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி நிவாரணங்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.