கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கஞ்சி வழங்கும் பணியில் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.