எல்.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான பதிவு ஆரம்பம்

0
99

லங்கா பிரீமியர் லீக்கின் (எல்.பி.எல்.) 4 ஆவது அத்தியாயத்தில் பங்கேற்க விரும்புகின்ற வெளிநாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் இலங்கை வீரர்கள் தத்தமது பெயர்களை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.  

வெளிநாட்டு வீரர்கள் https://srilankacricket.lk/lpl-playerregistration-portal/ என்ற இணையத்தளத்தின் மூலம் இரண்டு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யலாம்.சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய  வீரர்கள் கெப்ட்   பிளேயர்ஸ் பிரிவிலும் (CAPPTED PLAYERS), உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய வீரர்கள் அன்கெப்ட்   பிளேயர்ஸ் (UNCPPED PLAYERS) பிரிவிலும் பதிவு செய்ய முடியும். 

கெப்ட் பிளேயர்ஸ் 

இந்தப் பிரிவின் கீழ், பதிவு ‍செய்ய விரும்புகிற வெநாட்டு வீரர்கள் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி அல்லது சர்வதேச இருபதுக்கு 20 ஆகிய மூன்று வடிவங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது அவர் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தால், அவர் “கெப்ட்டு” வீரராகக் கருதப்படுவார்.

அன்கெப்ட் பிளேயர்ஸ்

இந்தப் பிரிவின் கீழ் தங்கள் நாட்டு தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடியில்லாத, ஆனால் அந்நாட்டு முதற்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அல்லது சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) பூரண அல்லது துணை உறுப்பு நாடுகளால்  நடத்தப்படுகின்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் லீக்கில் விளையாடிருக்க வேண்டும். இவ்வாறான வீரர்கள் ‘அன்கெப்ட்’ வீரர்களின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும்.

முன்னாள் இலங்கை வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, சர்வதேச கிரிக்கெட் சபையின் பூரண அல்லது துணை உறுப்பு நாடுகளால் நடத்தப்படும் போட்டிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள வீரர்கள் https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ இணைய போர்டல் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

இப்போட்டியில் வியைாட விரும்புகின்றவர்கள்  2023, மே மாதம் 25 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும்,அந்தந்த அணிகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வீரர்களுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்படத்தக்கது.