பெருந்தோட்டத் துறையினருக்கும் சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி திட்டங்களை வழங்க இணக்கம்!

0
168

சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி திட்டங்களை பெருந்தோட்டத் துறையினருக்கும் வழங்க இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறையினருக்கான நலன்புரித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில், நிதியமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த நலன்புரி திட்டங்களுக்காக பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கப்பட்ட தரவுகளில் குறைப்பாடுகள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனை மீளாய்வு செய்து, உரியவர்களை இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்குவதற்கு இன்றைய கூட்டத்தின் போது, இணக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய கலந்துரையாடல் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இவ்வாறு விளக்கமளித்தார்.