அதிகார பகிர்வு தொடர்பில் முல்லைத்தீவில் முக்கிய கலந்துரையாடல்

0
158

தமிழ் மக்களின் அரசியல் வகிபாகம் தொடர்பான விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

எக்டோ நிறுவனத்தில் மேலாளர் க.பிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்;துவப்படுத்தும் பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.