வரலாற்றுச் சாதனையாக மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 9 மாணவிகள் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி உள்ளதாக பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் தெரிவித்துள்ளார்.
வின்சென்ட் தேசிய பாடசாலையில், விஞ்ஞான பிரிவில் 63 வீத மாணவிகளும், கணித பிரிவில் 67 வீத மாணவிகளும், வர்த்தக பிரிவில் 100 வீத மாணவிகளும்,
கலை துறையில் 85 வீத மாணவிகளும் சித்தி அடைந்துள்ளனர். ஒன்பது மாணவிகள் 3ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் தலைமையில் இன்று இடம்பெற்றது.
பாடசாலை பிரதி அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர் என பலரும் கலந்து கொண்டனர்