மட்டக்களப்பு காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை இன்று இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் முகம்மட் முஜீப் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது பாடசாலை மாணவர்கள் வியாபாரப் பொருட்களை வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் இச்
சந்தையை பார்வையிட்டு பொருட்களை கொள்வனவு செய்தனர்.
நிகழ்வில் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹக்கீம், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலக ஆரம்பக் கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் தஸ்லீமா, கல்வி
அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.